ஏ வி எம்மின் அந்தநாள் 1954 இல் வெளியாது. இதன் கதையை எழுதி இயக்கியது வீணை எஸ்.பாலச்சந்தர். வசனம் ஜவஹர் சீதாராமன்,ஒளிப்பதிவும் மாருதிராவ், தயாரிப்பு ஏவி மெய்யப்ப செட்டியார்.இதில் பாட்டுக்கள் இல்லை.பின்னணி இசையை ஏவிஎம்மின் சரஸ்வதி இசைகுழுவே மேற்கொண்டது.
அந்த காலத்தில் மட்டும் அல்ல இன்றும் கூட மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை இந்த படம் முன்வைத்தது. இது படமாக்கிய விதமோ உண்மையில் ஒரு சர்வதேச தரத்தில் இருந்தது. அந்த காலத்தில் அவ்வளவு தூரம் முன்னேறியிருந்த தமிழ் சினிமா உலகம் பின்பு ஏனோ பின்தங்கி விட்டது.
மகாத்மா காந்தியின் சுதேசி போராட்டத்தில் மறைக்கபட்டிருந்த பல வரலாற்று உண்மைகளை இந்த படம் தொட்டிருக்கிறது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு சரியான பாதையை சரியான வரலாற்றை
காட்டவேண்டும் என்ற சமுக நோக்கில் இந்த படம் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய புரட்சி படம் என்றுதான் சொல்லவேண்டும்.
அன்றைய சமுகத்தில் நிலவி வந்த போலி தேசாபிமானம் அல்லது குருட்டு தேச பக்தி எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டியது.
தேசபக்தி கூச்சல் போடப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அது உண்மையில் வெறும் வேஷம்தான் என்பதை இந்த திரைப்படம் ஒன்றுதான் அன்று வெளிச்சம் போட்டு காட்டியது .அந்த வகையில் இது ஒரு வரலாற்று ஆவணமாகும்,
11 October 1943 அன்று இரவு ஜப்பான் சென்னை மீது குண்டு வீசியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பின்னப்பட்டதுதான் கதை,
அன்று திருவல்லிகேணியில் மிகவும் துடிப்புள்ள ஒரு ரேடியோ என்ஜினியர்.இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கும் மலிவான விலையில் ரேடியோ செய்ய முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.ஆனால் அவருக்கு பக்கபலமாக அன்று யாருமே இல்லை.இதனால் வெறுப்படைந்த அந்த இளைஞர் எடுத்த அடுத்த அடி..மிகவும் புரட்சிகரமானது அல்லது சர்ச்சைக்கு இடமானது. அவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் ! அவர்தான் கதையின் நாயகன்.அவர் எப்படி கொல்லப்பட்டார் ஏன் கொல்லப்பட்டார். என்பதை சுற்றி பல Flashback காட்சிகளால் கதை நகர்கிறது இல்லை இல்லை ஓடுகிறது.
அந்த காலத்தில் மட்டும் அல்ல இன்றும் கூட மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை இந்த படம் முன்வைத்தது. இது படமாக்கிய விதமோ உண்மையில் ஒரு சர்வதேச தரத்தில் இருந்தது. அந்த காலத்தில் அவ்வளவு தூரம் முன்னேறியிருந்த தமிழ் சினிமா உலகம் பின்பு ஏனோ பின்தங்கி விட்டது.
மகாத்மா காந்தியின் சுதேசி போராட்டத்தில் மறைக்கபட்டிருந்த பல வரலாற்று உண்மைகளை இந்த படம் தொட்டிருக்கிறது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு சரியான பாதையை சரியான வரலாற்றை
காட்டவேண்டும் என்ற சமுக நோக்கில் இந்த படம் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய புரட்சி படம் என்றுதான் சொல்லவேண்டும்.

தேசபக்தி கூச்சல் போடப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அது உண்மையில் வெறும் வேஷம்தான் என்பதை இந்த திரைப்படம் ஒன்றுதான் அன்று வெளிச்சம் போட்டு காட்டியது .அந்த வகையில் இது ஒரு வரலாற்று ஆவணமாகும்,
11 October 1943 அன்று இரவு ஜப்பான் சென்னை மீது குண்டு வீசியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பின்னப்பட்டதுதான் கதை,
அன்று திருவல்லிகேணியில் மிகவும் துடிப்புள்ள ஒரு ரேடியோ என்ஜினியர்.இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கும் மலிவான விலையில் ரேடியோ செய்ய முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.ஆனால் அவருக்கு பக்கபலமாக அன்று யாருமே இல்லை.இதனால் வெறுப்படைந்த அந்த இளைஞர் எடுத்த அடுத்த அடி..மிகவும் புரட்சிகரமானது அல்லது சர்ச்சைக்கு இடமானது. அவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் ! அவர்தான் கதையின் நாயகன்.அவர் எப்படி கொல்லப்பட்டார் ஏன் கொல்லப்பட்டார். என்பதை சுற்றி பல Flashback காட்சிகளால் கதை நகர்கிறது இல்லை இல்லை ஓடுகிறது.