Saturday, November 28, 2015

The English Patient கொதிக்கும் பாலைவன சுடுமணலில் உறங்காமல்.....அவள்....போராடி.....


The English Patient இரண்டாவது உலக யுத்தம் முடியும் நேரம்
இத்தாலிய நாட்டின் யுத்த களத்தில் திரைப்படத்தின் கதை நடக்கிறது.
 இத்தாலியிலும் துனிசியாவிலும் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரு அமெரிக்க பிரித்தானிய கூட்டு தயாரிப்பாகும்.
இதன் கதை இதே தலைப்பில் வெளிவந்த  மிக பிரபபமான ஒரு நாவலாகும். இதற்கு புலிட்சர் பரிசும் கிடைத்தது ,
இதன் ஆசிரியர் இலங்கையை சேர்ந்த மைக்கல் ஒண்டாச்சி என்பவராகும், இவர் இலங்கை பரங்கி இனத்தவராகும் மட்டக்களப்பில் உள்ள ஒண்டாச்சி மடம் என்ற கிராமம் தஞ்சாவூரிலும் உள்ளது, இவரின் மூதாதையர் தஞ்சாவூரை சேர்ந்தவர்களும் ஒல்லாந்து தேசத்தவர்களும் ஆவார்கள். இவர் கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு ஆசிரியர் எழுத்தாளர் பதிப்பாளர்
திரைப்பட ஆர்வலர் என்று இவரை பற்றி அடிக்கி கொண்டே போகலாம்,

இந்த திரைப்படம் இதன் மூலபிரதியில் இருந்து மிகவும் சவாலான கட்டங்களை தாண்டியே திரைக்கதை உருவத்தை எடுத்தது,
மிகவும் பாரதூரமான சம்பவங்களை இது உள்ளடக்கி இருக்கிறது,
ஒருபுறம் இரண்டாவது உலக யுத்தம் ஏற்படுத்தி விட்டு போன அவலம் சந்தேகம் ஆபத்து போட்டி பொறாமை வஞ்சம் ...அடுத்த செக்கன் என்ன நடக்கும் யார் எதிரி யார் நண்பன் என்று ஐரோப்பா முழுவதும் யுத்த கள நிலைமைகள் அப்படியே இன்னும் மாறாமல் இருந்தமை ஒருபுறம்,
காயப்பட்ட ராணுவத்தினர் பொதுமக்கள்  மற்றும் யுத்தகைதி பரிமாற்றம் மறுபுறம்.
யுத்தத்தில் யார் யார் என்னென்ன இலாபம் பெற்றார்கள் என்னன்ன தோல்விகள் காயங்கள் பெற்றார்கள் என்று யாருக்குமே தெளிவாக தெரியவில்லை, எல்லா மனிதர்களிடமும் ரகசியங்கள் ஏராளம் இருந்தன. எல்லோரும் எல்லோருக்கும் ஓரளவு பயந்தார்கள்.
எல்லா திசைகளிலும் அழிவுகள் சேதம் அவலங்களே காணப்பட்டான.;குண்டுகளால் சிதைவடைந்த ஒரு தேவாலயத்தில் உள்ள இத்தாலிய தாதி சேவை செய்துவருகிறார்,
அவர் பெயர் ஹன்னா. அவரிடம்  முக்கால் வாசி  நெருப்பால் எரிந்து போன ஒரு நோயாளியை இத்தாலிய ராணுவத்தினர் ஒப்படைத்தனர் .
அந்த பெயர் தெரியாத  நோயாளி ஒரு ஜெர்மன் உளவாளியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு.
அந்த நோயாளி ஆங்கிலம் பேசினார் எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்  English Patient.

Monday, November 9, 2015

Chicago... நீதிமன்றம் ...தீர்ப்பு....சட்டம்.....கவர்ச்சி....விளம்பரம்.....பத்திரிகைகள்.....எல்லாமே நாடகம்தான்? டேக் இட் ஈசி!

Chicago won six Academy Awards in 2003, including Best Picture. The film was critically lauded, and was the first musical to win Best Picture since 1969.The film is based on the 1975 Broadway musical, which ran for 936 performances
Chicago சிகாகோ ! இத்திரைப்படத்தை பற்றி
எழுதும்போதே மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஇது  ஒரு Broadway ஷோ சம்பந்தப்பட்ட கதை.
படம் பார்க்கும் போது  நாம்  ப்ராட்வே  ஷோவில்  ஒரு நாட்டிய நாடகம் போன்று  அதாவது  மானாட மயிலாட  பாணி நிகழ்ச்சியை  பார்க்கும் உணர்வு வருகிறது,
இத்திரைப்படத்தின்  கதை ஒரு ஒரு பெண் கைதிகளுக்கான சிறைச்சாலையில்தான் பெரும்பாலும் நகர்கிறது,
இரு வேறு வேறு கொலை குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு  சிறைக்குள் வந்து சேர்கிறார்கள் இரு இளம் அழகான நாட்டியகாரிகளும் Rene Zellwagger, Catherina Zeta Jones .
அவர்களுக்கு ஒத்தாசை புரியும்  Queen Latifaa ஊழல்  பெண் ஜெயில் வார்டன்.
அவர் சிபார்சில் வந்து சேர்ந்த  Richard Gerry கில்லாடி வக்கீல்.

இவர்களின் கொலைகள்  லேசுப்பட்டதல்ல .   இவர்களின் குற்ற பின்னணியின் கடுமையை குறைப்பதற்கு  முதலில் மக்களையும் பத்திரிக்கைகளையும் ஏமாற்றவேண்டும் . அதற்காக கில்லாடி வக்கீல்  அளக்கும் கதைகள் நாடகங்கள் மிகவும் சுவாரசியமானவை,.
அந்த  ஜெயிலில் பலவிதமான குற்றங்களை செய்த நூற்று கணக்கான பெண்கைதிகள்  இருந்தார்கள்.
பணம் இருந்தால் எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற்று வெளியே வரலாம் என்பதை ஓரளவு வெளிப்படையாக காட்டி
இருக்கிறார்கள்.  ஒரு அப்பாவி ஹங்கேரிய பெண் தூக்கில் இடப்படும் காட்சி மிகவும் வேதனையானது.
அதைகூட ஒரு நாட்டிய நாடக பாணியில் காட்டிஇருப்பது மிகவும் ஒரு அற்புதமான கலைவெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும், நவரசங்களையும் பாட்டு நடனமாகவே காட்டி இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பாகும். அதனாலதானோ என்னவோ ஆறு ஆஸ்கார் பரிசுகளையும் அளப்பெரிய வசூலையும் இது குவித்தது,
அந்த ஜெயிலில் பணம் இருந்தால் எதையும் செய்யலாம். பணம் இல்லாவிடில் உங்களுக்கு எதுவும் நடக்கலாம் 1975 இல் கதை நடப்பதாக காட்டப்பட்டு உள்ளது .  இன்றும் கூட இதுதான் நிலைமை ..அதைதான் இந்த படம் நையாண்டியாக காட்டி உள்ளது .அதனாலே இது  ஒருவகையில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்த படம்தான்,

Saturday, November 7, 2015

Heart and Souls கணக்குகள் முடியுமுன்னே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது சிலருக்கு....இல்லை இல்லை எல்லோருக்கும்தான்


இந்த திரைப்படத்தை பார்பதற்கு  உண்மையில் மிகவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . இது மனிதர்களின் எத்தனையோ அடிப்படை கேள்விகளுக்கு மிக சவாலான ஒரு படமாகும். இன்னும் சரியாக சொல்லப்போனால் எந்த புத்தகத்திலும் எந்த ஞானியும் சொல்ல முடியாத அளவு பிறப்பு, இறப்பு, வாழ்க்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம்  விலாவாரியாக விளங்க வைக்க முயற்சிக்கிறது.
எனது அனுபவத்தில் இது என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம். இந்த உலகில் நாம் எப்படி வந்தோம்? எப்படி போகப்போகிறோம்? எங்கே போகப்போகிறோம்? எப்படி வாழவேண்டும்? இந்த வாழ்வின் அற்புதம்தான் என்ன?
கதை என்னவோ இறந்தவர்களை பற்றிதான் ஆனால் மிகவும் உயிர்த்துடிப்புள்ள படம்.
கணவன் இன்றியே தனது மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் ஒரு  தாய்
தனது இரவு வேலைக்கு செல்கிறாள். அவள் ஒரு பேரூந்தில் ஏறுகிறாள்.
அந்த பேருந்தில் வேறு ஒரு நடுத்ததர வயது பாடகன் ஒருவனும் ஏறுகிறான் . அவனோ தன்னம்பிக்கை இல்லாதவன். பெரிய மண்டபத்தில் நடக்கபோகும் ஒத்திகைக்கு சமுகம் அளிக்க பயந்து தப்பி ஓடிவந்து பேருந்தில் ஏறியவன் .
வேறு ஒரு பெண் அதில் ஏறுகிறாள். அவளோ தனது காதலன் கேட்டும் வேலையை விட்டு அவனோடு செல்ல மறுத்து பின்பு அது தவறு என்று எண்ணிக்கொண்டே இதே பேருந்தில் ஏறுகிறாள்.
நாலாவது நபர் ஒரு திருடன், ஒரு சிறுவனை ஏமாற்றி அவனது பழைய பெறுமதி வாய்ந்த முத்திரைகளை திருடி விற்று விட்டான். பின்பு அதை
திருப்பி எடுத்து அந்த சிறுவனிடம் கொடுக்க எண்ணிக்கொண்டே பேருந்தில் ஏறுகிறான்.
இந்த நான்கு பயணிகளோடு பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் சாரதி அருகில் வந்து கொண்டிருந்த வேறு ஒரு காரில் உள்ள பெண்ணை ரசித்து பார்த்துக்கொண்டே வந்து வேறு ஒரு காரோடு மோதி விடுகிறான் .பேருந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கி விடுகிறது .

Thursday, November 5, 2015

Chocolat - Chocolaterie MAYA.. மனித வாழ்வு ஓரு சொக்கலேட்டு போல...ரசிக்கவேண்டும்...


“Life is what you celebrate. All of it. Even its end.”
 A woman and her daughter open a chocolate shop in a small French village that shakes up the rigid morality of the community.
சொக்கலேட் மிகவும் அழகான ஆனால் புரட்சிகரமான திரைப்படம் . இரண்டாவது உலக
யுத்தம் முடிந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு பின்பு இன்னும் பழமையை கைவிடாத ஒரு பிரெஞ்சு கிராமத்தை சுற்றி கதை செல்கிறது. அந்த கிராமத்தில் மிகவும் பழம் வாய்ந்த ஒரு நபராக தேவாலயத்தின் பாதிரியார்..அவரை பின்னணியில் இருந்து இயக்கம் உள்ளூர் மேயர்..பாதிரியார் மூலமாக அந்த கிராமத்தில் ஏறக்குறைய ஒரு சர்வாதிகாரி மாதிரி இருக்கிறார்.இவர்களின் வழிகாட்டல்களை அல்லது போதனைகளை தவிர சுயமாக எதையுமே சிந்திக்காத எதுவுமே தெரியாத கிராமத்து மக்கள்.

இந்த கிராமதிற்கு ஒரு நாள் ஒரு பெண் தனது சிறிய மகனோடு வருகிறார்.அவர் அங்கு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து தனது சொக்கலட் கடையை ஆரம்பிக்கிறார். அதுவரை அந்த மக்களுக்கு சொக்கலட் என்றால் என்னவென்றே தெரியாது. எதுவித பொழுதுபோக்குகளும் சுவாரசியமும் அற்ற அந்த கிராமத்துக்கு அந்த சொக்கலேட் கடையும் அதை நடத்தும் அந்த பெண்ணும் மிகபெரும் கவர்ச்சி பொருள் ஆகின்றனர், அந்த கிராமக்களின் கவனம் சொக்கலேட்டை நோக்கி போவதை விரும்பாத பழமைவாத பாதிரியும் மேயரும் அதை ஒரு சாத்தானின் வரவாக சித்தரிக்கின்றனர். சதா ஒரு சீரியசான முகத்தோடு உலகத்தையே தனது தலையில் சுமப்பது போன்று எதற்கும் ஒரு கட்டுப்பாடு ஒழுக்கம் சட்டம் என்று மக்களை ஒரு இறுக்கத்தில் வைத்திருக்கும் மேயருக்கு நாள் போக போக மக்கள் தற்போதெல்லாம் தேவாலய நிகழ்சிகளை விட சொக்கலேட்டை அதிகம் விரும்புகிறார்கள் என்ற எண்ணம் வரத்தொடங்கி விட்டது. மெதுவாக சொக்கலேட் கடை க்கும் அதை நடத்தும் பெண்ணை பற்றியும் மக்களுக்கு வெறுப்பு வருமாறு செய்வதற்கு பலவிதமான பிரசார உத்திகளை கையாளுகிறார்.

மக்கள் யுத்தத்தின் வடுக்களில் இருந்து இன்னும் விடுபடாமல் இருக்கும் பொழுது இந்த மாதிரி சொக்கலேட் கடை எல்லாம் ஒரு அவமானம் ...அவளும் தந்தை பெயர் தெரியாத அவளது மகனும் ஒரு வெட்கம் தரும் விடயம் என்றெல்லாம் கயிறு திரித்து பார்க்கிறார்.

Tuesday, November 3, 2015

Gone With The Wind என்னைவிட...ஏன் உன்னையும் விட நீ நேசித்தது இந்த மண்ணைத்தான் ! நாளை காலை விடியும் போது அது ஒரு புது நாள்....தாரா..


Gone With The Wind  கோன் வித் த வின்ட் ...இது  1939 வெளியான ஹாலிவூட் திரைக்காவியம், இதுவரை இதன் வசூல் சாதனையை வேறு ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை. அதாவது   $3,440,000,000  டொலர்கள் வசூலித்தது இன்னும் இதன் வியாபாரம் டிவிக்களிலும் டிவிடிக்களாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
மார்கிரட் மிச்சல் என்ற பெண்மணியால் எழுதப்பட்ட ஒரே ஒரு நாவல் இதுதான் இது புலிட்சர் பரிசு பெற்றது . இது மிகப்பெரிய படமாகும் இதன் மூலப்பிரதியான நாவலும் மிகவும் பெரியதாகும், இதன் கதையை சுருக்கமாக காட்டுவது கூட மிகவும் கடினமாகும்,  இதைபடமாக்க MGM Panavision போன்ற பெரிய நிறுவனங்கள் தயங்கி கொண்டிருந்த வெளியில்  டேவிட் சொல்செனிக் என்ற ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார். சுமார் இரண்டுவருடங்கள்  பலவித இன்னல்களையும் சோதனைகளையும் தாண்டவேண்டி இருந்தது. படப்பிடிப்ப்பு நடந்த சில காலத்திலேயே இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில்  வேற்றுமை அதிகமாகி இயக்குனர் சென்றுவிட்டார்.பின்பு  விக்டர் பிளெமிங் என்ற ஒரு இயக்குனரை கொண்டு பெரும்பகுதி படத்தை எடுத்து முடித்தார்கள்.
இதன் படப்பிடிப்பு அந்த காலத்திலேயே மிகவும் நேர்த்தியுடன் எடுக்கப்பட்டது. படத்தில் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட விடயம் அதன் வர்ண சேர்க்கையாகும். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு திருப்தி இல்லாததால் எடுக்கப்பட்ட பிலிம் மேல் மீண்டும் வர்ணங்கள் சேர்க்கப்பட்டன .இது அந்த காலத்தில் மிகவும் அற்புதமாக பரீட்சித்து பார்த்து வெற்றி அளிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும் .