Tuesday, December 29, 2015

His Highness Abdulla ஒரு அனந்தன் நம்பூதிரி பிராமணன் எப்படி ஒரு அப்துல்லாவாக முடியும்....


His Highness Abdulla ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா ..தொண்ணுறுகளில் வெளியாகிய மிக நல்ல மலையாள திரைப்படம்.
வாரிசு இல்லாத ஒரு  அரசுகுடும்ப  தலைவரை(நெடு முடி வேணு )  கொன்று
அவரது சொத்துக்களை  பங்கு போடதுடிக்கும்   உறவினர்கள் ஒரு வாடகை  கொலையாளியை மும்பையில்  இருந்து  வரவழைக்கின்றனர்,
இங்கேதான் பெரிய தவறு நடந்து விட்டது. வந்தவன்  ஒரு கொலையாளியே அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலையால் பணத்தேவை கருதி  கொலை தொழிலுக்கு புதிதாக வந்துவிட்ட ஒரு மென்மையான இசைகலைஞன் அவன், அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்த அவனின் உண்மயான பெயர் அப்துல்லா என்பதாகும்
அவனால் வாக்குறுதி அளித்த படி அரசரை கொல்ல முடியவில்லை.
சங்கீத பிரியரான  அரசர்  இவனின் சங்கீதத்தில் மயங்கி விட்டார்,
கொல்லவந்தவன் உறவினர்களிடம் பேசி அவர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறான் .
அவர்கள் தற்போது தாங்களே அரசரை கொன்று விட்டு பழியை கூலிக்கு வந்த கொலைகாரன் அனந்தன் நம்பூதிரி  மீது பழியை போட தீர்மானித்தனர்,
கொல்லவந்த  அனந்தன் நம்பூதிரி வீட்டை விட்டு ஓடினால் அரசரை உறவினர்களே கொன்றுவிட்டு சுலபமாக பழியை அனந்தன் நம்பூதிரி  மீது போட்டு விடமுடியும்,
கொஞ்ச நாள் பழக்கத்தில் அரசர் மீது நெருங்கி பழகியதால் அரசரை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அனந்தன் நம்பூதிரி  நிலை பெரும் கேள்வி குறியாகிவிட்டது .
இதற்கிடையில் அரசருக்கோ அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்தவனின் உண்மை பெயர் அப்துல்லா  என்றும் அவன் தன்னை கொலைசெய்வதற்கு வந்த கொலையாளிதான் என்று அறிந்து  அதிர்ந்து போகிறார்,

Saturday, December 26, 2015

Dor தோர் .அது சாதாரண ஜீனத்தின் கைகளல்ல....


Dor தோர் ! இமாச்சல பிரதேசத்தின் பச்சை புல்வெளிகள் மலைகள்
பள்ளத்தாக்குகள்...எந்த ரசனை அற்ற கடோர்கஜனையும் மயங்க வைக்கும் இயற்கை அழகு அந்த மாநிலத்திற்கு பிரபஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறது, அங்கே உள்ள ஒரு சின்னஞ்சிறு தம்பதிகளின் வாழ்வில் அடித்தது மிகபெரும் புயல்.
சவுதி அரேபியாவுக்கு சென்ற அவளின் ( ஜீனத்) கணவன் செய்யாத ஒரு கொலைகுற்றச்சாட்டில் தூக்குதண்டனையை எதிர்நோக்குகிரான்.
அவனின் கூட்டாளியின் மரணத்திற்கு அவனையே குற்றவாளியாக நீதிமன்றம் தீர்மானித்து விட்டது,
இனி அவனை காப்பாற்ற இறந்தவனின் மனைவியின் மன்னிப்பினால் மட்டுமே முடியும்,
இறந்தவன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்து, அவனின் மனைவி எங்கே இருக்கிறாள் அவளின் விலாசம் என்ன?
எங்கே ஒரு இமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் இறந்தவனின் மனைவியை தேடி கிடைத்த ஒரு லாரியில் ராஜஸ்தான் பயணமாகிறாள்.
ஏராளமான முயற்சிகளுக்கு பின்பு ஜீனத் அந்த இளம் விதைவை பெண்ண மீராவை சந்திக்கிறாள்.
மீராவுக்கு எந்த விபரமும் சொல்லாமல் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்து தங்குகிறாள். ஜீனத் தினசரி வரும் கோவில்லுக்கு அருகில் சென்று அவளோடு நட்பு பழகுகிறாள்.

Wednesday, December 16, 2015

Idanazhiyil oru Kaalocha இடநாழியில் ஒரு காலோச்சா...... திருப்பங்களில் எல்லாம் ஒரு கவிதைத் தன்மை..

இந்த மலையாள திரைப்படம் மிக பெரிய வெற்றி படம் .
எனகென்னவோ இந்த படம் உரிய முறையில்  கவுரவிக்க படவில்லை என்றே கருதுகிறேன். தேசிய விருதுகள் பெற்றிருக்க வேண்டிய படம் ஏனோ பெறவில்லை.
ஜெயபாரதி,  சோமன், திலகன், கார்த்திகா, வினீத், நிழல்கள் ரவி, ஆடூர் பாசி மற்றும் பலர் நடித்த இதன் இயக்குனர் பத்ரன் ,
பழம்பெரும் இசையமைப்பாள தக்ஷணாமூர்த்தியின் மிக மிக அற்புதமான இசையில் இது உருவானது.
ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளதூரம் உயிரை கொடுக்கும் என்பதை இந்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது,

பதினைந்து வருஷங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு போய்விட்ட கணவன்.
மனசுக்குள்ளே வருஷங்களாக அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணின் சோகத்தை கண்களில் தேக்கி உணர்ச்சி பிழம்பாக ஆனால் மௌனமாக காட்சி தரும் ஜெயபாரதியின் முகம் யாராலும் மறக்கவே முடியாது ,
அவரது கண்களில் ஒரு  உயிர் அழுகின்ற ஓசை படம் பார்ப்பவர்கள்
எல்லோரினதும் மனதையும் நிச்சயம் ஊடுருவும் .
பிரிந்து போன கணவன் மகனை முதல் முதலாக கண்ட பொழுது அம்மைக்கு சுகமானு என்று கேட்டதை மகன் வினீத் மிக சாதரணமாக ஜெயபாரதியிடம் கூறும் காட்சி......
ஜெயபாரதியிடம் ஒரு எரிமலை பொங்கி எழுகிறது....அம்மைக்கு சுகமாணு?
ஓர் ஆயிரம் கேள்விகள் கேட்க துடிக்கும் கண்ணகி போல அவள் வெடிக்கிறாள்...
பதினைந்து வருஷங்களாக ஒரு தபால் கூட போடாத கணவன் இன்று தனது நலம் விசாரிப்பதை அவளால் தாங்கவே முடியவில்லை....
அமுங்கி போயிருந்த கோபம்.....
ஜெயபாரதியின் கண்களோடு போட்டி போடும் தக்ஷனாமூர்த்தியின் இசை. 
தக்ஷனாமூர்த்தியின் இசையில் எவ்வளவு தூரம் உணர்சிகள் பேசும் என்பதை என்னால் எழுதிக்காட்ட முடியவில்லை.
ஒற்றை காலில் சதங்கை அணிந்து ஜெயபாரதியின் கால்கள் கணவனை பேசும் காட்சி... அதற்கு உயிர் கொடுக்கும் இந்தோள ராகம்.