Monday, November 5, 2018

தமழ் சினிமாவில் பொற்காலம் ..... எண்பதுகள்தான்


Shalin Maria Lawrence : தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பொற்காலம்
என்றால் அது எண்பதுகள்தான்.தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன் நாடாகத்தன்மையில் இருந்து யதார்த்த சினிமாவிற்கு மாறி கொண்டிருந்த காலம் அது.ஒரு பெண் தன் ஒப்பனையெல்லாம் களைத்து இயல்பு நிலையில் எவ்வளவு எளிமையாக இருப்பாளோ அத்தனை எளிமையும் ,ரசனையும் ,ரம்மியமுமாக இருந்தது தமிழ் சினிமா அப்பொழுது. உதாரணத்துக்கு நடிகை ஷோபாவை போல . Simple ,fresh and deep.
எழுபதுகளின் கடைசியில் இருந்து என்பதுகளிளின் துவக்கம் வரை பல புது இயக்குனர்கள் புது கலைகளோடு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக படர ஆரம்பித்தார்கள்.மகேந்திரன்,ஆபாவணன் ,பாலு மகேந்திரா ,கே.விஜயன்,பாரதிராஜா ,பாக்கியராஜ்,t. ராஜேந்தர் ,எஸ் எ சந்திரசேகர் என்று தமிழ் சினிமாவில் பூசி இருந்த டிஸ்டம்பரை கலரை அழித்து கொண்டிருந்தார்கள்...தங்கள் வண்ணங்களால் நிரப்பி கொண்டிருந்தார்கள்.
பல கலை படங்களை உருவாக்கினார்கள் ,எளிய மனிதர்களின் சினிமாவை உருவாக்கினார்கள்.
நண்டு ,மெட்டி ,உதிரி பூக்கள் ,பசி ,அவள் அப்படிதான் போன்ற art film பாணியில் உள்ள கலை படங்கள் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் தண்ணீர் தண்ணீர் ,தூரத்து இடி முழக்கம் ,சட்டம் ஒரு இருட்டறை என்று மக்கள் அரசியல் பேசிய படங்கள்.
அந்த வரிசையில்தான் எண்பதுகளில் கம்யூனிசம் பேசிய படங்கள் அதிகம் வந்தன.