ராதா மனோகர் : dor ( தோர் ) ஹிந்தி திரைப்படம்! வெளியான ஆண்டு 2006
இந்து முஸ்லீம் மதங்கள் சார்ந்த சில சிக்கலான பிரச்சனைகளை,
மனித மாண்பு குறையாமல் அழகியலோடு காட்சி படுத்தி இருக்கிறார்கள்
இமாச்சல பிரதேசத்தின் பச்சை புல்வெளிகள் மலைகள் அழகிய பள்ளத்தாக்குகள்.
எந்தவித ரசனையும் அற்றவர்களை கூட மயங்க வைக்கும் இயற்கை அழகை பிரபஞ்சம் அந்த மாநிலத்திற்கு அளவுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறது,
அங்கே உள்ள ஒரு சின்னஞ்சிறு தம்பதிகளின் வாழ்வில் அடித்தது மிகபெரும் புயல்.
சவுதி அரேபியாவுக்கு சென்ற அவளின் ( ஜீனத்) கணவன் செய்யாத ஒரு கொலைகுற்றச்சாட்டில் தூக்குதண்டனையை எதிர்நோக்குகிரான்.
அவனின் கூட்டாளியின் மரணத்திற்கு அவனையே குற்றவாளியாக நீதிமன்றம் தீர்மானித்து விட்டது,
Cinepass Enter
Thursday, October 12, 2023
Dor ( தோர் ) ஹிந்தி இந்து முஸ்லீம் பிரச்சனைகளை அழகியலோடு காட்சி படுத்தி இருக்கிறார்கள்
Tuesday, December 18, 2018
Court மராத்தி ... திரைத் தாலாட்டுக்களில் இருந்து ஒரு .... .. விழிக்கலாம் முடிந்தால்?
கோர்ட் ....மராத்தி ஹிந்தி குஜராத்தி ஆங்கிலம் எல்லாம் கலந்த கலவை
2015 இல் வெளிவந்த Court ஒரு மராத்தி திரைப்படம். வழக்கமாக நான் ரசித்த படங்களை பற்றி எல்லாம் வாய்க்கு வந்த படி அளந்து கொண்டு வரும் எனக்கு இந்த படம் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டது.
வழக்கமான திரைப்படங்களுக்கு உரிய சட்ட திட்டங்களும் அல்லது கற்பனைகளும் .எதிர்ப்பார்ப்புக்களும் இந்த படத்துக்கு பொருந்தாது .எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டது Court கோர்ட்.
இது எந்த மொழி படம் என்று அறுதியாக கூறமுடியாதோ அதே போலவே இது என்ன படம் என்றும் இலகுவாக கூறி விட முடியாது.
இந்த படத்தில் வரும் எந்த காட்சியும் ஒரு இலகுவான கவிதையை அல்லது காதலை கூறவில்லை. பின்னணி இசைகூட கிடையாது.
காட்சிகளில் காமராவோ இயக்குனரோ வசனகர்த்தவோ எதுவும் கிடையாது என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.
நீதிமன்றங்களையும் தெருவோரங்களையும் சந்தைகளையும் நாம் எப்படி அன்றாடம் பார்த்துக்கொண்டே கடந்து போய்கொண்டு இருக்கிறோமோ அதே போன்று இந்த திரைப்படம் உள்ளது, இதில் என்ன அதிசயம் இருக்கிறது நீங்கள் எண்ணுவது புரிகிறது.
வழக்கமாக நாம் காணும் நீதிமன்றங்களும் தெருவோரங்களும் சந்தைகளும் இதுவரை இந்த திரையில் கண்டது போல் இதுவரையில் காணவில்லை.
இது எந்தவிதமான செய்தியையும் கூட புதிதாக தரவில்லை . ஆனால் எமக்கு நன்றாகவே தெரிந்து சகிக்க பழகிவிட்ட மிக சாதாரண விடயங்களை மீண்டும் எமது கண் முன்னே கொண்டுவந்துவிட்டு தன்பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறது.
அவற்றை பார்ப்பதுவும் அதை பற்றி சிந்திப்பதையும் கூட வலியுறுத்தவில்லை. இந்த திரைப்படத்துக்குத்தான் காமெரா இயக்குனர்கள் வசனங்கள் பின்னணி இசை என்று எதுவுமே இல்லையே?
2015 இல் வெளிவந்த Court ஒரு மராத்தி திரைப்படம். வழக்கமாக நான் ரசித்த படங்களை பற்றி எல்லாம் வாய்க்கு வந்த படி அளந்து கொண்டு வரும் எனக்கு இந்த படம் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டது.

இது எந்த மொழி படம் என்று அறுதியாக கூறமுடியாதோ அதே போலவே இது என்ன படம் என்றும் இலகுவாக கூறி விட முடியாது.
இந்த படத்தில் வரும் எந்த காட்சியும் ஒரு இலகுவான கவிதையை அல்லது காதலை கூறவில்லை. பின்னணி இசைகூட கிடையாது.
காட்சிகளில் காமராவோ இயக்குனரோ வசனகர்த்தவோ எதுவும் கிடையாது என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.
நீதிமன்றங்களையும் தெருவோரங்களையும் சந்தைகளையும் நாம் எப்படி அன்றாடம் பார்த்துக்கொண்டே கடந்து போய்கொண்டு இருக்கிறோமோ அதே போன்று இந்த திரைப்படம் உள்ளது, இதில் என்ன அதிசயம் இருக்கிறது நீங்கள் எண்ணுவது புரிகிறது.
வழக்கமாக நாம் காணும் நீதிமன்றங்களும் தெருவோரங்களும் சந்தைகளும் இதுவரை இந்த திரையில் கண்டது போல் இதுவரையில் காணவில்லை.

அவற்றை பார்ப்பதுவும் அதை பற்றி சிந்திப்பதையும் கூட வலியுறுத்தவில்லை. இந்த திரைப்படத்துக்குத்தான் காமெரா இயக்குனர்கள் வசனங்கள் பின்னணி இசை என்று எதுவுமே இல்லையே?
Monday, November 5, 2018
தமழ் சினிமாவில் பொற்காலம் ..... எண்பதுகள்தான்
Shalin Maria Lawrence : தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பொற்காலம்
என்றால் அது எண்பதுகள்தான்.தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக தன் நாடாகத்தன்மையில் இருந்து யதார்த்த சினிமாவிற்கு மாறி கொண்டிருந்த காலம் அது.ஒரு பெண் தன் ஒப்பனையெல்லாம் களைத்து இயல்பு நிலையில் எவ்வளவு எளிமையாக இருப்பாளோ அத்தனை எளிமையும் ,ரசனையும் ,ரம்மியமுமாக இருந்தது தமிழ் சினிமா அப்பொழுது. உதாரணத்துக்கு நடிகை ஷோபாவை போல . Simple ,fresh and deep.
எழுபதுகளின் கடைசியில் இருந்து என்பதுகளிளின் துவக்கம் வரை பல புது இயக்குனர்கள் புது கலைகளோடு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக படர ஆரம்பித்தார்கள்.மகேந்திரன்,ஆபாவணன் ,பாலு மகேந்திரா ,கே.விஜயன்,பாரதிராஜா ,பாக்கியராஜ்,t. ராஜேந்தர் ,எஸ் எ சந்திரசேகர் என்று தமிழ் சினிமாவில் பூசி இருந்த டிஸ்டம்பரை கலரை அழித்து கொண்டிருந்தார்கள்...தங்கள் வண்ணங்களால் நிரப்பி கொண்டிருந்தார்கள்.
பல கலை படங்களை உருவாக்கினார்கள் ,எளிய மனிதர்களின் சினிமாவை உருவாக்கினார்கள்.
நண்டு ,மெட்டி ,உதிரி பூக்கள் ,பசி ,அவள் அப்படிதான் போன்ற art film பாணியில் உள்ள கலை படங்கள் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் தண்ணீர் தண்ணீர் ,தூரத்து இடி முழக்கம் ,சட்டம் ஒரு இருட்டறை என்று மக்கள் அரசியல் பேசிய படங்கள்.
அந்த வரிசையில்தான் எண்பதுகளில் கம்யூனிசம் பேசிய படங்கள் அதிகம் வந்தன.
Sunday, March 20, 2016
நான் கடவுள் ! கதாநாயகியை கதாநாயகன் கௌரவ கொலைசெய்வதை காவியப்படுத்திய ஜெயமோகன் + பாலா GANG


நான் கடவுள்....ஆம்பிளை கடவுள். அதாவது பெண்களின் கற்பு கௌரவம் மற்றும் பெண்மை அல்லது பாரம்பரியம் இன்னும் என்னனவோ காரணங்கள் இருப்பதாக ஆண்கள் கருதினால் அந்த பெண்ணை கொல்வது அவளுக்கு நீங்கள் செய்த சேவையாகும். இதுதான் ஜெயமோகன் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்தின் செய்தியாகும்.
என்னன்னவோ காரணங்கள், இந்துமதம், சந்தன தர்மம், அஹம் பிரமச்வாமி, சுகம் மனித இறைச்சி என்று பித்தலாட்டங்கள் எல்லாம் படம் பிடித்தாலும் சொல்ல வந்த கருத்து என்னவென்றால்: கதாநாயகியின் புனிதத்தை காப்பாற்ற அவளுக்கு பூலோகத்தில் இருந்து அந்த ஆம்பிள சுவாமி விடுதலை கொடுத்தான்.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெண்களுக்கு கொடுக்கும் மரணதண்டனைதான் அந்த வரம்.

கணக்கான சமயங்கள் கலாச்சாரங்கள் தோறும் காலத்துக்கு காலம் இடம்பெற்று இருந்தமை வரலாற்று சோகம்.
இந்த காட்டுமிராண்டித்தனம் இன்னும் இந்தியா பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் தொடர்வது மனித சமுதாயம் வெட்கி வேதனை படவேண்டிய விடயமாகும்.

நான் கடவுள் படத்தை பற்றி எதுவுமே சொல்ல தோன்றவில்லை .
எத்தனையோ நல்ல காட்சிகள் எல்லாம் இருந்தும் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல பெண்ணை கொலை செய்வது இந்து தர்மத்தை காப்பதற்காக அல்லது அவருக்கு விடுதலை கொடுப்பதாக காட்டியது மிக
பெரும் குற்றம்.
தமிழ் சினிமா பெண்களை சாட்சாத் அம்பிகை ஸ்தானத்தில் வைப்பதாக கூறிக்கொண்டு ஒரு கடைத்தர மஞ்சள் பட ரேஞ்சுக்கு காட்டுவது அந்த கால எம்ஜியாரில் இருந்து தொடர்கிறது.

பழைய பாலச்சந்தர் பெண்களை வேண்டும் என்றே கெட்டுபோவதாக காட்டி Erotic blue film எடுத்துவிட்டு... பின்பு இந்து அல்லது பாரத தர்மத்தை காப்பதற்காக அவளை கொன்றுவிடுவார்.
இந்த புதிய பாலாவும் அதைதான் இன்னும் பலபடிகள் முன்னேறி பயங்கரமாக கழுத்தை கடித்து கொன்று விடுகிறார்.
நமக்கு என்னனவோ விபரீதமான சந்தேகம் எல்லாம் வருகிறது. தம்பி பாலா RSS சிடம் அல்லது வேறு சமய பயங்கரவாதிகளிடம் கொள்கை பரப்பு
செயலாளர் பதவி பெற்று விட்டாரோ?
Tuesday, February 16, 2016
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்....ஒரு மசாலா படம் மூளைக்கு இவ்வளவு வேலை கொடுக்கிறதே?
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்....இப்படி ஒரு பெயரில் படம். மக்களின் Unconscious Mind இல் மிகவும் ஆழமாக பதிந்துள்ள ஒரு அபிப்பிராயத்தையே படத்தின் பெயராக வைத்த புத்திசாலித்தனத்தை மெச்சாமல் இருக்கவே முடியாது. அதே சமயம் கொஞ்சம் அமைதியை கிளறி விடும் சமுகநீதி provoking வாசமும் இந்த பெயரில் மறைந்திருக்கிறது.
நகைச்சுவை படம் போல தெரிந்தாலும் அடிப்படையில் இது ஒரு feel good மூவிதான். இவ்வளவு சுத்தமான ஒரு அழகான ஒரு படம் தமிழில் மிகவும் அபூர்வமாகதான் வரும். இதில் ஆபாசமான ஒரு காட்சியும் இல்லை. சண்டைகள் வன்முறை போன்றவை கொஞ்சம் இருந்தாலும் எந்த காட்சியும்

காட்சிகளை அமைத்துள்ளார்கள்.
Saturday, January 2, 2016
"What Dreams May Come" நமது கனவுகள் வெறும் கனவுகள் அல்ல....அவை இனி தொடர்ந்து......வரும்.


கருத்தை இந்த திரைப்படம் சொல்ல முயற்சிக்கிறது,

திரைப்படமாகவும் இதை பார்க்கலாம்.
நமது மனதை நிச்சயம் கொஞ்சம் அசைத்து பார்த்து விடக்கூடிய வலிமை இந்த
இது இப்படித்தானா என்ற கேள்வியை அல்லது பதிலை எமக்குள் இது கிளப்பி விடும்.
இப்படம் சொல்லவரும் செய்தி உண்மையிலேயே உண்மை என்பது இவ்வளவு அழகானதா? என்று வியக்க வைக்கிறது.

கதையின் முடிச்சை நான் கூறினால் அதன் சுவாரசியத்தை நான் உங்களிடம்
இருந்து பறிக்கும் தீய செயலை செய்தவன் ஆவேன் ,எனவே ஓரளவு கோடி காட்ட முயற்சிக்கிறேன்,
Tuesday, December 29, 2015
His Highness Abdulla ஒரு அனந்தன் நம்பூதிரி பிராமணன் எப்படி ஒரு அப்துல்லாவாக முடியும்....
His Highness Abdulla ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா ..தொண்ணுறுகளில் வெளியாகிய மிக நல்ல மலையாள திரைப்படம்.
வாரிசு இல்லாத ஒரு அரசுகுடும்ப தலைவரை(நெடு முடி வேணு ) கொன்று
அவரது சொத்துக்களை பங்கு போடதுடிக்கும் உறவினர்கள் ஒரு வாடகை கொலையாளியை மும்பையில் இருந்து வரவழைக்கின்றனர்,
இங்கேதான் பெரிய தவறு நடந்து விட்டது. வந்தவன் ஒரு கொலையாளியே அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலையால் பணத்தேவை கருதி கொலை தொழிலுக்கு புதிதாக வந்துவிட்ட ஒரு மென்மையான இசைகலைஞன் அவன், அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்த அவனின் உண்மயான பெயர் அப்துல்லா என்பதாகும்
அவனால் வாக்குறுதி அளித்த படி அரசரை கொல்ல முடியவில்லை.
சங்கீத பிரியரான அரசர் இவனின் சங்கீதத்தில் மயங்கி விட்டார்,
கொல்லவந்தவன் உறவினர்களிடம் பேசி அவர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறான் .
அவர்கள் தற்போது தாங்களே அரசரை கொன்று விட்டு பழியை கூலிக்கு வந்த கொலைகாரன் அனந்தன் நம்பூதிரி மீது பழியை போட தீர்மானித்தனர்,
கொல்லவந்த அனந்தன் நம்பூதிரி வீட்டை விட்டு ஓடினால் அரசரை உறவினர்களே கொன்றுவிட்டு சுலபமாக பழியை அனந்தன் நம்பூதிரி மீது போட்டு விடமுடியும்,
கொஞ்ச நாள் பழக்கத்தில் அரசர் மீது நெருங்கி பழகியதால் அரசரை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அனந்தன் நம்பூதிரி நிலை பெரும் கேள்வி குறியாகிவிட்டது .
இதற்கிடையில் அரசருக்கோ அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்தவனின் உண்மை பெயர் அப்துல்லா என்றும் அவன் தன்னை கொலைசெய்வதற்கு வந்த கொலையாளிதான் என்று அறிந்து அதிர்ந்து போகிறார்,

அவரது சொத்துக்களை பங்கு போடதுடிக்கும் உறவினர்கள் ஒரு வாடகை கொலையாளியை மும்பையில் இருந்து வரவழைக்கின்றனர்,

அவனால் வாக்குறுதி அளித்த படி அரசரை கொல்ல முடியவில்லை.
சங்கீத பிரியரான அரசர் இவனின் சங்கீதத்தில் மயங்கி விட்டார்,
கொல்லவந்தவன் உறவினர்களிடம் பேசி அவர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறான் .
அவர்கள் தற்போது தாங்களே அரசரை கொன்று விட்டு பழியை கூலிக்கு வந்த கொலைகாரன் அனந்தன் நம்பூதிரி மீது பழியை போட தீர்மானித்தனர்,
கொல்லவந்த அனந்தன் நம்பூதிரி வீட்டை விட்டு ஓடினால் அரசரை உறவினர்களே கொன்றுவிட்டு சுலபமாக பழியை அனந்தன் நம்பூதிரி மீது போட்டு விடமுடியும்,
கொஞ்ச நாள் பழக்கத்தில் அரசர் மீது நெருங்கி பழகியதால் அரசரை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அனந்தன் நம்பூதிரி நிலை பெரும் கேள்வி குறியாகிவிட்டது .
இதற்கிடையில் அரசருக்கோ அனந்தன் நம்பூதிரி என்ற பெயரில் வந்தவனின் உண்மை பெயர் அப்துல்லா என்றும் அவன் தன்னை கொலைசெய்வதற்கு வந்த கொலையாளிதான் என்று அறிந்து அதிர்ந்து போகிறார்,
Saturday, December 26, 2015
Dor தோர் .அது சாதாரண ஜீனத்தின் கைகளல்ல....

பள்ளத்தாக்குகள்...எந்த ரசனை அற்ற கடோர்கஜனையும் மயங்க வைக்கும் இயற்கை அழகு அந்த மாநிலத்திற்கு பிரபஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறது, அங்கே உள்ள ஒரு சின்னஞ்சிறு தம்பதிகளின் வாழ்வில் அடித்தது மிகபெரும் புயல்.


இறந்தவன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு இந்து, அவனின் மனைவி எங்கே இருக்கிறாள் அவளின் விலாசம் என்ன?
எங்கே ஒரு இமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் இறந்தவனின் மனைவியை தேடி கிடைத்த ஒரு லாரியில் ராஜஸ்தான் பயணமாகிறாள்.
ஏராளமான முயற்சிகளுக்கு பின்பு ஜீனத் அந்த இளம் விதைவை பெண்ண மீராவை சந்திக்கிறாள்.
மீராவுக்கு எந்த விபரமும் சொல்லாமல் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்து தங்குகிறாள். ஜீனத் தினசரி வரும் கோவில்லுக்கு அருகில் சென்று அவளோடு நட்பு பழகுகிறாள்.
Wednesday, December 16, 2015
Idanazhiyil oru Kaalocha இடநாழியில் ஒரு காலோச்சா...... திருப்பங்களில் எல்லாம் ஒரு கவிதைத் தன்மை..
இந்த மலையாள திரைப்படம் மிக பெரிய வெற்றி படம் .
எனகென்னவோ இந்த படம் உரிய முறையில் கவுரவிக்க படவில்லை என்றே கருதுகிறேன். தேசிய விருதுகள் பெற்றிருக்க வேண்டிய படம் ஏனோ பெறவில்லை.
ஜெயபாரதி, சோமன், திலகன், கார்த்திகா, வினீத், நிழல்கள் ரவி, ஆடூர் பாசி மற்றும் பலர் நடித்த இதன் இயக்குனர் பத்ரன் ,
பழம்பெரும் இசையமைப்பாள தக்ஷணாமூர்த்தியின் மிக மிக அற்புதமான இசையில் இது உருவானது.
ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளதூரம் உயிரை கொடுக்கும் என்பதை இந்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது,
பதினைந்து வருஷங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு போய்விட்ட கணவன்.
மனசுக்குள்ளே வருஷங்களாக அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணின் சோகத்தை கண்களில் தேக்கி உணர்ச்சி பிழம்பாக ஆனால் மௌனமாக காட்சி தரும் ஜெயபாரதியின் முகம் யாராலும் மறக்கவே முடியாது ,
அவரது கண்களில் ஒரு உயிர் அழுகின்ற ஓசை படம் பார்ப்பவர்கள்
எல்லோரினதும் மனதையும் நிச்சயம் ஊடுருவும் .
பிரிந்து போன கணவன் மகனை முதல் முதலாக கண்ட பொழுது அம்மைக்கு சுகமானு என்று கேட்டதை மகன் வினீத் மிக சாதரணமாக ஜெயபாரதியிடம் கூறும் காட்சி......
ஜெயபாரதியிடம் ஒரு எரிமலை பொங்கி எழுகிறது....அம்மைக்கு சுகமாணு?
ஓர் ஆயிரம் கேள்விகள் கேட்க துடிக்கும் கண்ணகி போல அவள் வெடிக்கிறாள்...
பதினைந்து வருஷங்களாக ஒரு தபால் கூட போடாத கணவன் இன்று தனது நலம் விசாரிப்பதை அவளால் தாங்கவே முடியவில்லை....
அமுங்கி போயிருந்த கோபம்.....
ஜெயபாரதியின் கண்களோடு போட்டி போடும் தக்ஷனாமூர்த்தியின் இசை.
தக்ஷனாமூர்த்தியின் இசையில் எவ்வளவு தூரம் உணர்சிகள் பேசும் என்பதை என்னால் எழுதிக்காட்ட முடியவில்லை.
ஒற்றை காலில் சதங்கை அணிந்து ஜெயபாரதியின் கால்கள் கணவனை பேசும் காட்சி... அதற்கு உயிர் கொடுக்கும் இந்தோள ராகம்.
எனகென்னவோ இந்த படம் உரிய முறையில் கவுரவிக்க படவில்லை என்றே கருதுகிறேன். தேசிய விருதுகள் பெற்றிருக்க வேண்டிய படம் ஏனோ பெறவில்லை.
ஜெயபாரதி, சோமன், திலகன், கார்த்திகா, வினீத், நிழல்கள் ரவி, ஆடூர் பாசி மற்றும் பலர் நடித்த இதன் இயக்குனர் பத்ரன் ,
பழம்பெரும் இசையமைப்பாள தக்ஷணாமூர்த்தியின் மிக மிக அற்புதமான இசையில் இது உருவானது.
ஒரு படத்திற்கு பின்னணி இசை எவ்வளதூரம் உயிரை கொடுக்கும் என்பதை இந்திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது,
பதினைந்து வருஷங்களுக்கு முன்பு கோபித்து கொண்டு போய்விட்ட கணவன்.
மனசுக்குள்ளே வருஷங்களாக அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணின் சோகத்தை கண்களில் தேக்கி உணர்ச்சி பிழம்பாக ஆனால் மௌனமாக காட்சி தரும் ஜெயபாரதியின் முகம் யாராலும் மறக்கவே முடியாது ,
அவரது கண்களில் ஒரு உயிர் அழுகின்ற ஓசை படம் பார்ப்பவர்கள்
எல்லோரினதும் மனதையும் நிச்சயம் ஊடுருவும் .
பிரிந்து போன கணவன் மகனை முதல் முதலாக கண்ட பொழுது அம்மைக்கு சுகமானு என்று கேட்டதை மகன் வினீத் மிக சாதரணமாக ஜெயபாரதியிடம் கூறும் காட்சி......
ஜெயபாரதியிடம் ஒரு எரிமலை பொங்கி எழுகிறது....அம்மைக்கு சுகமாணு?
ஓர் ஆயிரம் கேள்விகள் கேட்க துடிக்கும் கண்ணகி போல அவள் வெடிக்கிறாள்...
பதினைந்து வருஷங்களாக ஒரு தபால் கூட போடாத கணவன் இன்று தனது நலம் விசாரிப்பதை அவளால் தாங்கவே முடியவில்லை....
அமுங்கி போயிருந்த கோபம்.....
ஜெயபாரதியின் கண்களோடு போட்டி போடும் தக்ஷனாமூர்த்தியின் இசை.
தக்ஷனாமூர்த்தியின் இசையில் எவ்வளவு தூரம் உணர்சிகள் பேசும் என்பதை என்னால் எழுதிக்காட்ட முடியவில்லை.
ஒற்றை காலில் சதங்கை அணிந்து ஜெயபாரதியின் கால்கள் கணவனை பேசும் காட்சி... அதற்கு உயிர் கொடுக்கும் இந்தோள ராகம்.
Saturday, November 28, 2015
The English Patient கொதிக்கும் பாலைவன சுடுமணலில் உறங்காமல்.....அவள்....போராடி.....
The English Patient இரண்டாவது உலக யுத்தம் முடியும் நேரம்
இத்தாலிய நாட்டின் யுத்த களத்தில் திரைப்படத்தின் கதை நடக்கிறது.
இத்தாலியிலும் துனிசியாவிலும் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரு அமெரிக்க பிரித்தானிய கூட்டு தயாரிப்பாகும்.
இதன் கதை இதே தலைப்பில் வெளிவந்த மிக பிரபபமான ஒரு நாவலாகும். இதற்கு புலிட்சர் பரிசும் கிடைத்தது ,
இதன்
ஆசிரியர் இலங்கையை சேர்ந்த மைக்கல் ஒண்டாச்சி என்பவராகும், இவர் இலங்கை
பரங்கி இனத்தவராகும் மட்டக்களப்பில் உள்ள ஒண்டாச்சி மடம் என்ற கிராமம்
தஞ்சாவூரிலும் உள்ளது, இவரின் மூதாதையர் தஞ்சாவூரை சேர்ந்தவர்களும்
ஒல்லாந்து தேசத்தவர்களும் ஆவார்கள். இவர் கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு
ஆசிரியர் எழுத்தாளர் பதிப்பாளர்
திரைப்பட ஆர்வலர் என்று இவரை பற்றி அடிக்கி கொண்டே போகலாம்,
இந்த திரைப்படம் இதன் மூலபிரதியில் இருந்து மிகவும் சவாலான கட்டங்களை தாண்டியே திரைக்கதை உருவத்தை எடுத்தது,
மிகவும் பாரதூரமான சம்பவங்களை இது உள்ளடக்கி இருக்கிறது,
ஒருபுறம் இரண்டாவது உலக யுத்தம் ஏற்படுத்தி விட்டு போன அவலம் சந்தேகம் ஆபத்து போட்டி பொறாமை வஞ்சம் ...அடுத்த செக்கன் என்ன நடக்கும் யார் எதிரி யார் நண்பன் என்று ஐரோப்பா முழுவதும் யுத்த கள நிலைமைகள் அப்படியே இன்னும் மாறாமல் இருந்தமை ஒருபுறம்,
காயப்பட்ட ராணுவத்தினர் பொதுமக்கள் மற்றும் யுத்தகைதி பரிமாற்றம் மறுபுறம்.
யுத்தத்தில்
யார் யார் என்னென்ன இலாபம் பெற்றார்கள் என்னன்ன தோல்விகள் காயங்கள்
பெற்றார்கள் என்று யாருக்குமே தெளிவாக தெரியவில்லை, எல்லா மனிதர்களிடமும்
ரகசியங்கள் ஏராளம் இருந்தன. எல்லோரும் எல்லோருக்கும் ஓரளவு பயந்தார்கள்.
எல்லா திசைகளிலும் அழிவுகள் சேதம் அவலங்களே காணப்பட்டான.;குண்டுகளால் சிதைவடைந்த ஒரு தேவாலயத்தில் உள்ள இத்தாலிய தாதி சேவை செய்துவருகிறார்,
அவர் பெயர் ஹன்னா. அவரிடம் முக்கால் வாசி நெருப்பால் எரிந்து போன ஒரு நோயாளியை இத்தாலிய ராணுவத்தினர் ஒப்படைத்தனர் .
அந்த பெயர் தெரியாத நோயாளி ஒரு ஜெர்மன் உளவாளியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு.
அந்த நோயாளி ஆங்கிலம் பேசினார் எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் English Patient.
இத்தாலிய நாட்டின் யுத்த களத்தில் திரைப்படத்தின் கதை நடக்கிறது.
இத்தாலியிலும் துனிசியாவிலும் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரு அமெரிக்க பிரித்தானிய கூட்டு தயாரிப்பாகும்.
இதன் கதை இதே தலைப்பில் வெளிவந்த மிக பிரபபமான ஒரு நாவலாகும். இதற்கு புலிட்சர் பரிசும் கிடைத்தது ,

திரைப்பட ஆர்வலர் என்று இவரை பற்றி அடிக்கி கொண்டே போகலாம்,

மிகவும் பாரதூரமான சம்பவங்களை இது உள்ளடக்கி இருக்கிறது,
ஒருபுறம் இரண்டாவது உலக யுத்தம் ஏற்படுத்தி விட்டு போன அவலம் சந்தேகம் ஆபத்து போட்டி பொறாமை வஞ்சம் ...அடுத்த செக்கன் என்ன நடக்கும் யார் எதிரி யார் நண்பன் என்று ஐரோப்பா முழுவதும் யுத்த கள நிலைமைகள் அப்படியே இன்னும் மாறாமல் இருந்தமை ஒருபுறம்,
காயப்பட்ட ராணுவத்தினர் பொதுமக்கள் மற்றும் யுத்தகைதி பரிமாற்றம் மறுபுறம்.

எல்லா திசைகளிலும் அழிவுகள் சேதம் அவலங்களே காணப்பட்டான.;குண்டுகளால் சிதைவடைந்த ஒரு தேவாலயத்தில் உள்ள இத்தாலிய தாதி சேவை செய்துவருகிறார்,
அவர் பெயர் ஹன்னா. அவரிடம் முக்கால் வாசி நெருப்பால் எரிந்து போன ஒரு நோயாளியை இத்தாலிய ராணுவத்தினர் ஒப்படைத்தனர் .
அந்த பெயர் தெரியாத நோயாளி ஒரு ஜெர்மன் உளவாளியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு.
அந்த நோயாளி ஆங்கிலம் பேசினார் எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் English Patient.
Monday, November 9, 2015
Chicago... நீதிமன்றம் ...தீர்ப்பு....சட்டம்.....கவர்ச்சி....விளம்பரம்.....பத்திரிகைகள்.....எல்லாமே நாடகம்தான்? டேக் இட் ஈசி!
Chicago won six Academy Awards in 2003, including Best Picture. The film was critically lauded, and was the first musical to win Best Picture since 1969.The film is based on the 1975 Broadway musical, which ran for 936 performances
Chicago சிகாகோ ! இத்திரைப்படத்தை பற்றி
எழுதும்போதே மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஇது ஒரு Broadway ஷோ சம்பந்தப்பட்ட கதை.
படம் பார்க்கும் போது நாம் ப்ராட்வே ஷோவில் ஒரு நாட்டிய நாடகம் போன்று அதாவது மானாட மயிலாட பாணி நிகழ்ச்சியை பார்க்கும் உணர்வு வருகிறது,
இத்திரைப்படத்தின் கதை ஒரு ஒரு பெண் கைதிகளுக்கான சிறைச்சாலையில்தான் பெரும்பாலும் நகர்கிறது,
இரு வேறு வேறு கொலை குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் வந்து சேர்கிறார்கள் இரு இளம் அழகான நாட்டியகாரிகளும் Rene Zellwagger, Catherina Zeta Jones .
அவர்களுக்கு ஒத்தாசை புரியும் Queen Latifaa ஊழல் பெண் ஜெயில் வார்டன்.
அவர் சிபார்சில் வந்து சேர்ந்த Richard Gerry கில்லாடி வக்கீல்.

இவர்களின் கொலைகள் லேசுப்பட்டதல்ல . இவர்களின் குற்ற பின்னணியின் கடுமையை குறைப்பதற்கு முதலில் மக்களையும் பத்திரிக்கைகளையும் ஏமாற்றவேண்டும் . அதற்காக கில்லாடி வக்கீல் அளக்கும் கதைகள் நாடகங்கள் மிகவும் சுவாரசியமானவை,.
அந்த ஜெயிலில் பலவிதமான குற்றங்களை செய்த நூற்று கணக்கான பெண்கைதிகள் இருந்தார்கள்.
பணம் இருந்தால் எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற்று வெளியே வரலாம் என்பதை ஓரளவு வெளிப்படையாக காட்டி
இருக்கிறார்கள். ஒரு அப்பாவி ஹங்கேரிய பெண் தூக்கில் இடப்படும் காட்சி மிகவும் வேதனையானது.
அதைகூட ஒரு நாட்டிய நாடக பாணியில் காட்டிஇருப்பது மிகவும் ஒரு அற்புதமான கலைவெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும், நவரசங்களையும் பாட்டு நடனமாகவே காட்டி இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பாகும். அதனாலதானோ என்னவோ ஆறு ஆஸ்கார் பரிசுகளையும் அளப்பெரிய வசூலையும் இது குவித்தது,
அந்த ஜெயிலில் பணம் இருந்தால் எதையும் செய்யலாம். பணம் இல்லாவிடில் உங்களுக்கு எதுவும் நடக்கலாம் 1975 இல் கதை நடப்பதாக காட்டப்பட்டு உள்ளது . இன்றும் கூட இதுதான் நிலைமை ..அதைதான் இந்த படம் நையாண்டியாக காட்டி உள்ளது .அதனாலே இது ஒருவகையில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்த படம்தான்,
எழுதும்போதே மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஇது ஒரு Broadway ஷோ சம்பந்தப்பட்ட கதை.

இத்திரைப்படத்தின் கதை ஒரு ஒரு பெண் கைதிகளுக்கான சிறைச்சாலையில்தான் பெரும்பாலும் நகர்கிறது,
இரு வேறு வேறு கொலை குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் வந்து சேர்கிறார்கள் இரு இளம் அழகான நாட்டியகாரிகளும் Rene Zellwagger, Catherina Zeta Jones .
அவர்களுக்கு ஒத்தாசை புரியும் Queen Latifaa ஊழல் பெண் ஜெயில் வார்டன்.
அவர் சிபார்சில் வந்து சேர்ந்த Richard Gerry கில்லாடி வக்கீல்.

இவர்களின் கொலைகள் லேசுப்பட்டதல்ல . இவர்களின் குற்ற பின்னணியின் கடுமையை குறைப்பதற்கு முதலில் மக்களையும் பத்திரிக்கைகளையும் ஏமாற்றவேண்டும் . அதற்காக கில்லாடி வக்கீல் அளக்கும் கதைகள் நாடகங்கள் மிகவும் சுவாரசியமானவை,.

பணம் இருந்தால் எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற்று வெளியே வரலாம் என்பதை ஓரளவு வெளிப்படையாக காட்டி
இருக்கிறார்கள். ஒரு அப்பாவி ஹங்கேரிய பெண் தூக்கில் இடப்படும் காட்சி மிகவும் வேதனையானது.

அந்த ஜெயிலில் பணம் இருந்தால் எதையும் செய்யலாம். பணம் இல்லாவிடில் உங்களுக்கு எதுவும் நடக்கலாம் 1975 இல் கதை நடப்பதாக காட்டப்பட்டு உள்ளது . இன்றும் கூட இதுதான் நிலைமை ..அதைதான் இந்த படம் நையாண்டியாக காட்டி உள்ளது .அதனாலே இது ஒருவகையில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்த படம்தான்,
Saturday, November 7, 2015
Heart and Souls கணக்குகள் முடியுமுன்னே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது சிலருக்கு....இல்லை இல்லை எல்லோருக்கும்தான்

எனது அனுபவத்தில் இது என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம். இந்த உலகில் நாம் எப்படி வந்தோம்? எப்படி போகப்போகிறோம்? எங்கே போகப்போகிறோம்? எப்படி வாழவேண்டும்? இந்த வாழ்வின் அற்புதம்தான் என்ன?
கதை என்னவோ இறந்தவர்களை பற்றிதான் ஆனால் மிகவும் உயிர்த்துடிப்புள்ள படம்.
கணவன் இன்றியே தனது மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் ஒரு தாய்
தனது இரவு வேலைக்கு செல்கிறாள். அவள் ஒரு பேரூந்தில் ஏறுகிறாள்.
அந்த பேருந்தில் வேறு ஒரு நடுத்ததர வயது பாடகன் ஒருவனும் ஏறுகிறான் . அவனோ தன்னம்பிக்கை இல்லாதவன். பெரிய மண்டபத்தில் நடக்கபோகும் ஒத்திகைக்கு சமுகம் அளிக்க பயந்து தப்பி ஓடிவந்து பேருந்தில் ஏறியவன் .

நாலாவது நபர் ஒரு திருடன், ஒரு சிறுவனை ஏமாற்றி அவனது பழைய பெறுமதி வாய்ந்த முத்திரைகளை திருடி விற்று விட்டான். பின்பு அதை
திருப்பி எடுத்து அந்த சிறுவனிடம் கொடுக்க எண்ணிக்கொண்டே பேருந்தில் ஏறுகிறான்.
இந்த நான்கு பயணிகளோடு பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் சாரதி அருகில் வந்து கொண்டிருந்த வேறு ஒரு காரில் உள்ள பெண்ணை ரசித்து பார்த்துக்கொண்டே வந்து வேறு ஒரு காரோடு மோதி விடுகிறான் .பேருந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கி விடுகிறது .
Thursday, November 5, 2015
Chocolat - Chocolaterie MAYA.. மனித வாழ்வு ஓரு சொக்கலேட்டு போல...ரசிக்கவேண்டும்...
“Life is what you celebrate. All of it. Even its end.”
A woman and her daughter open a chocolate shop in a small French village that shakes up the rigid morality of the community.
சொக்கலேட் மிகவும் அழகான ஆனால் புரட்சிகரமான திரைப்படம் . இரண்டாவது உலக
யுத்தம் முடிந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு பின்பு இன்னும் பழமையை கைவிடாத ஒரு பிரெஞ்சு கிராமத்தை சுற்றி கதை செல்கிறது. அந்த கிராமத்தில் மிகவும் பழம் வாய்ந்த ஒரு நபராக தேவாலயத்தின் பாதிரியார்..அவரை பின்னணியில் இருந்து இயக்கம் உள்ளூர் மேயர்..பாதிரியார் மூலமாக அந்த கிராமத்தில் ஏறக்குறைய ஒரு சர்வாதிகாரி மாதிரி இருக்கிறார்.இவர்களின் வழிகாட்டல்களை அல்லது போதனைகளை தவிர சுயமாக எதையுமே சிந்திக்காத எதுவுமே தெரியாத கிராமத்து மக்கள்.
இந்த கிராமதிற்கு ஒரு நாள் ஒரு பெண் தனது சிறிய மகனோடு வருகிறார்.அவர் அங்கு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து தனது சொக்கலட் கடையை ஆரம்பிக்கிறார். அதுவரை அந்த மக்களுக்கு சொக்கலட் என்றால் என்னவென்றே தெரியாது. எதுவித பொழுதுபோக்குகளும் சுவாரசியமும் அற்ற அந்த கிராமத்துக்கு அந்த சொக்கலேட் கடையும் அதை நடத்தும் அந்த பெண்ணும் மிகபெரும் கவர்ச்சி பொருள் ஆகின்றனர்,

மக்கள் யுத்தத்தின் வடுக்களில் இருந்து இன்னும் விடுபடாமல் இருக்கும் பொழுது இந்த மாதிரி சொக்கலேட் கடை எல்லாம் ஒரு அவமானம் ...அவளும் தந்தை பெயர் தெரியாத அவளது மகனும் ஒரு வெட்கம் தரும் விடயம் என்றெல்லாம் கயிறு திரித்து பார்க்கிறார்.
Tuesday, November 3, 2015
Gone With The Wind என்னைவிட...ஏன் உன்னையும் விட நீ நேசித்தது இந்த மண்ணைத்தான் ! நாளை காலை விடியும் போது அது ஒரு புது நாள்....தாரா..


இதன் படப்பிடிப்பு அந்த காலத்திலேயே மிகவும் நேர்த்தியுடன் எடுக்கப்பட்டது. படத்தில் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட விடயம் அதன் வர்ண சேர்க்கையாகும். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு திருப்தி இல்லாததால் எடுக்கப்பட்ட பிலிம் மேல் மீண்டும் வர்ணங்கள் சேர்க்கப்பட்டன .இது அந்த காலத்தில் மிகவும் அற்புதமாக பரீட்சித்து பார்த்து வெற்றி அளிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும் .
Monday, October 26, 2015
Andha Naal சுயமாக சிந்திக்க தெரிந்தவனுக்கு இந்தியாவில் என்னவேலை... அன்று மட்டுமா....இன்றும் இதுதான் நிலைமை...
ஏ வி எம்மின் அந்தநாள் 1954 இல் வெளியாது. இதன் கதையை எழுதி இயக்கியது வீணை எஸ்.பாலச்சந்தர். வசனம் ஜவஹர் சீதாராமன்,ஒளிப்பதிவும் மாருதிராவ், தயாரிப்பு ஏவி மெய்யப்ப செட்டியார்.இதில் பாட்டுக்கள் இல்லை.பின்னணி இசையை ஏவிஎம்மின் சரஸ்வதி இசைகுழுவே மேற்கொண்டது.
அந்த காலத்தில் மட்டும் அல்ல இன்றும் கூட மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை இந்த படம் முன்வைத்தது. இது படமாக்கிய விதமோ உண்மையில் ஒரு சர்வதேச தரத்தில் இருந்தது. அந்த காலத்தில் அவ்வளவு தூரம் முன்னேறியிருந்த தமிழ் சினிமா உலகம் பின்பு ஏனோ பின்தங்கி விட்டது.
மகாத்மா காந்தியின் சுதேசி போராட்டத்தில் மறைக்கபட்டிருந்த பல வரலாற்று உண்மைகளை இந்த படம் தொட்டிருக்கிறது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு சரியான பாதையை சரியான வரலாற்றை
காட்டவேண்டும் என்ற சமுக நோக்கில் இந்த படம் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய புரட்சி படம் என்றுதான் சொல்லவேண்டும்.
அன்றைய சமுகத்தில் நிலவி வந்த போலி தேசாபிமானம் அல்லது குருட்டு தேச பக்தி எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டியது.
தேசபக்தி கூச்சல் போடப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அது உண்மையில் வெறும் வேஷம்தான் என்பதை இந்த திரைப்படம் ஒன்றுதான் அன்று வெளிச்சம் போட்டு காட்டியது .அந்த வகையில் இது ஒரு வரலாற்று ஆவணமாகும்,
11 October 1943 அன்று இரவு ஜப்பான் சென்னை மீது குண்டு வீசியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பின்னப்பட்டதுதான் கதை,
அன்று திருவல்லிகேணியில் மிகவும் துடிப்புள்ள ஒரு ரேடியோ என்ஜினியர்.இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கும் மலிவான விலையில் ரேடியோ செய்ய முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.ஆனால் அவருக்கு பக்கபலமாக அன்று யாருமே இல்லை.இதனால் வெறுப்படைந்த அந்த இளைஞர் எடுத்த அடுத்த அடி..மிகவும் புரட்சிகரமானது அல்லது சர்ச்சைக்கு இடமானது. அவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் ! அவர்தான் கதையின் நாயகன்.அவர் எப்படி கொல்லப்பட்டார் ஏன் கொல்லப்பட்டார். என்பதை சுற்றி பல Flashback காட்சிகளால் கதை நகர்கிறது இல்லை இல்லை ஓடுகிறது.
அந்த காலத்தில் மட்டும் அல்ல இன்றும் கூட மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை இந்த படம் முன்வைத்தது. இது படமாக்கிய விதமோ உண்மையில் ஒரு சர்வதேச தரத்தில் இருந்தது. அந்த காலத்தில் அவ்வளவு தூரம் முன்னேறியிருந்த தமிழ் சினிமா உலகம் பின்பு ஏனோ பின்தங்கி விட்டது.
மகாத்மா காந்தியின் சுதேசி போராட்டத்தில் மறைக்கபட்டிருந்த பல வரலாற்று உண்மைகளை இந்த படம் தொட்டிருக்கிறது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு சரியான பாதையை சரியான வரலாற்றை
காட்டவேண்டும் என்ற சமுக நோக்கில் இந்த படம் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய புரட்சி படம் என்றுதான் சொல்லவேண்டும்.

தேசபக்தி கூச்சல் போடப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அது உண்மையில் வெறும் வேஷம்தான் என்பதை இந்த திரைப்படம் ஒன்றுதான் அன்று வெளிச்சம் போட்டு காட்டியது .அந்த வகையில் இது ஒரு வரலாற்று ஆவணமாகும்,
11 October 1943 அன்று இரவு ஜப்பான் சென்னை மீது குண்டு வீசியது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பின்னப்பட்டதுதான் கதை,
அன்று திருவல்லிகேணியில் மிகவும் துடிப்புள்ள ஒரு ரேடியோ என்ஜினியர்.இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கும் மலிவான விலையில் ரேடியோ செய்ய முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்.ஆனால் அவருக்கு பக்கபலமாக அன்று யாருமே இல்லை.இதனால் வெறுப்படைந்த அந்த இளைஞர் எடுத்த அடுத்த அடி..மிகவும் புரட்சிகரமானது அல்லது சர்ச்சைக்கு இடமானது. அவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் ! அவர்தான் கதையின் நாயகன்.அவர் எப்படி கொல்லப்பட்டார் ஏன் கொல்லப்பட்டார். என்பதை சுற்றி பல Flashback காட்சிகளால் கதை நகர்கிறது இல்லை இல்லை ஓடுகிறது.
Friday, October 16, 2015
City of Joy அவலம் நிறைந்த ஒரு சேரியில்...அழகான மனிதம்...வெடித்த ஒரு புரட்சி! Patrick Swayze, Om Puri and Shabana Azmi.

அங்கே அவர் கண்டது சந்தித்தது.....ஆத்மீகம் தேடியவருக்கு கிடைத்தது ஏமாற்றம் ..துன்பம்... துரோகம்.. வறுமை.
அவரை சிந்திக்கவே விடாமல் விதி கல்கத்தாவின் சேரியில் கொண்டு போய் சேர்த்துவிட்டது.
கையில் உள்ள காசையும் பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டு அடித்து நொறுக்கியது குண்டர் கூட்டம்.
பிகாரில் கந்துவட்டி காரரிடம் தனது நிலத்தை பறிகொடுத்துவிட்டு பஞ்சம் பிழைக்க வந்த ஹன்சாரியும் அவனது மனைவியும் மட்டுமே கூக்குரல் கேட்டு ஓடி வந்தனர்.
நினைவு மயங்கி இருந்த டாக்டர் மக்சை தங்களது குடிசைக்கு தூக்கி சென்று ஒரு வெள்ளைக்கார நர்சிடம் Joan Bethel சேர்த்தனர்.
மனித வாழ்வின் அவலத்தை கண்டு அதை விட்டு விலகி விடஎண்ணியவருக்கு அது முடியவில்லை.அவரின் சேவை அங்கு மிகவும் தேவையாக இருந்தது. அதையும் விட அந்த மக்களின் வாழ்வோடு அவரை அறியாமலேயே அவர் கொஞ்சம் நெருங்கிவிட்டார்.
அந்த மக்கள் கொடூரமான முதலாளிகளினதும் மக்களை பற்றி கொஞ்சம் கூட கவனிக்காத அரசாங்கங்களின் பாராமுகத்தாலும் ஒரு பிராணிகள் போன்று அந்த சேரியில் வாழ்ந்தார்கள்.
Thursday, October 15, 2015
Being There வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்! காட்சிகளை மீறிய ஒரு உண்மை!Peter Sellers Shirley MacLaine


என்னதான் உலகம் அவரை நோக்கி வந்தாலும் அவரோ தனது தனது இருப்பில் தானாக தான் மட்டுமாகவே இருந்தார். உண்மையில் பிரபஞ்சம் இழுத்த இழுப்புக்கு இழுபட்டு கொண்டிருந்தார்.
ஒரு பணகாரியின் கார் வந்து அவரை மோதியது.
பின்பு அந்த பணக்காரியின் காதலையும் பெற்றார் ஆனால் அது அவருக்கு தெரியவே இல்லை.
அவளின் மரணப்படுக்கையில் இருக்கும் கணவனோ கார்டனரை தனது ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகவே கொண்டாட தொடங்கி விட்டார்.
Sunday, October 11, 2015
Chemmeen கருத்தம்மாவை தேடி கடலும் பரீக்குட்டியும் ஓயாமல் ஒலித்த........

மண்வாசம் கடல் வாசம் மீன்வாசம் எல்லாம் கலந்து காதல் வாசத்தையும் சுமந்தது செம்மீன்.
அடிப்படையில் இது ஒரு புரட்சிப் படம்தான்.
மதத்தையும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளையும் மீறி வந்த காதல்.
அதுவும் வறுமை தாண்டவமாடிய அந்த கடலோர கிராமத்து பின்புலத்தில்!
நிரந்தரமில்லாத மீனவ குடும்பங்களின் வறுமை ஒருபுறம்.

இதுதான் துரோகத்தின் எல்லை. பாவம் பரீக்குட்டி!
சூழ்நிலை கைதி ஆகிவிட்ட கருத்தம்மா பழனிக்கு வாழ்க்கைப்படும் சோகம்,
அந்த சோகத்தை எண்ணி கண்ணீர் விட கூட உரிமையில்லாத வாழ்க்கை.
அவள் எப்படித்தான் வாழ முயற்சித்தாலும் கருதம்மாவையும் பழனியையும் நிம்மதியாக வாழவிடகூடாது என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கும் கிராமத்தவர்களின் தரம் குறைந்த பேச்சுகள் பழனியின் மனதில் சந்தேக நெருப்பை சதா மூடிக்கொண்டு இருக்கிறது,
இந்த நெருப்பை சமாளிக்க முடியாமல் தடுமாறும் கருத்தம்மா மறுபுறம் மறக்க முடியாத அந்த பரீக்குட்டியின் நினைவுகளால் ஒவ்வொரு நிமிஷமும் வெந்து சாகிறாள்.
Subscribe to:
Posts (Atom)